”ஒரு கடுகு வெடிக்கிற சத்தம் தான் சமையலின் ஆரம்ப இசை” அந்த வாசனை மட்டுமல்ல, அதில் நம் உடலுக்கு தேவையான மருத்துவ நன்மைகளும் அடங்கியுள்ளது. உணவுக்கு சுவை மட்டும் அல்ல, உடலுக்கு நலம், பாட்டி வைத்தியங்களில் மருந்து, தொடக்க நிகழ்வுகளில் தோஷ நிவாரணம் என பல பரிமாணங்களில் கடுகு நம்ம கலாச்சாரத்தில் முக்கிய இடம் பெற்றிருக்கு. ஆனால் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மசாலா..ஏன் சமையலில் முதலில் சேர்க்கபடுகிறது? எங்கேயிருந்து வந்தது? அதை உணவில் சேர்த்ததும் உடலில் என்ன நடக்கிறது ? என்பதை பற்றி இக்கட்டுரையில் தெளிவாக பார்ப்போம்.
கடுகு என்றால் என்ன?

மஸ்டர்ட் சீட்ஸ்(Musturd seeds)என பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பரவலாக பயரிடப்படும் ஒரு சுறுசுறுப்பான மசாலா இது. கருங்கடுகு, வெண்கடுகு, பழுப்புக்கடுகு என்று மூன்று முக்கிய வகைகள் உள்ளன.
- கருங்கடுகு- இந்தியா சமையலில் அதிகம் பயன்படுகிறது.
- வெண்கடுகு- அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் சில மேனிக்கருக்கிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
- பழுப்புக்கடுகு- மேற்கு நாடுகளில் சாஸ், ஃபிளேவர் சேர்க்கும் பொருளாக பயன்படுகிறது.
கடுகின் வரலாறு- எங்கே இருந்து வந்தது?

உலகின் மிகப்பழமையான மசாலாக்களில் ஒன்று.இதன் வரலாறு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிருக்கிறது.
- இந்து சமயத்தில் கடுகுஎண்ணெய் முக்கிய பங்கு வகித்தது- அது தீமைகளை அகற்றும் புனித எண்ணெயாகப் பயன்படுத்தபட்டது.
- இந்து திருமணங்கள் மற்றும் தொடக்க நிகழ்வுகளில் கடுகுஎண்ணெய் தீய சக்திகளை அகற்றுவதற்கு உடலுக்கு ஒளிர்ச்சி கொடுக்கவும் தேய்க்கப்பட்டிருக்கிறது.
- சிந்து சமவெளி நாகரிகம்- அங்கு கடுகுவிதைகள் கண்டுபிடிக்கபட்டதற்கான archaeological evidence இருக்கிறது.
- மத்திய ஆசியா, பாரசீகம் வழியாக யூரோப்புக்குப் போனது. பின்னர் ரோமாப் பேரரசில் சாஸ்(sauce) உருவாக்கப்பட்டது இதுதான் இன்றைய mustard sauce-க்கு அடிப்படை!!
இடுக்கி ஏலைக்காயை எங்கள் இணையளத்தில் வாங்கிட இங்கே கிளிக் செய்யவும்- Shop Now
சமையலில்- சுவையோடு நலம்

கடுகு இல்லாமல் தாளிப்பு ஒன்றே இல்லை! சாம்பார், கூட்டு, புலாவ், உருளைக்கிழங்கு, சூப் எல்லாம் தாளிக்கக் கடுகு கட்டாயம் வேண்டும். கடுகு உணவிற்கு ,
- வாசனை மற்றும் சுவை சேர்க்கும்
- ஜீரணத்துக் துணை புரியும்
- கொழுப்பு உறிஞ்சலை கட்டுபடுத்தும்
பழங்காலத்தில் நம் பாட்டிகள் “நாட்டு வைத்திய” முறையில் கடுகை உணவிலும், மருந்தாகவும் சேர்த்தனர்.
தாளிப்பின் முதல் கதாநாயகன் ஏன்?
எந்த ஒரு தமிழ்ச் சமயலாக இருந்தாலும் வெந்தயத்தோடு சேர்ந்து முதலில் எண்ணெயில் தாளிக்கப்படும் ஒரு பொருள் தான் கடுகு.

ஆனா ஏன் கடுகு முதலிலேயே எண்ணெயில் போடனும்?
அது எப்படி புழங்கிப் போச்சு நம்ம சமையலுக்கு?
- அதாவது கடுகுஎண்ணெயில் போடும்போது ’வெதலை வெதலை வெதல்’ என ஒரு சத்ததுடன் பொட்டென்று வெடிக்கும். இதன்மூலமாக, கடுகில் இருக்கும் வாசனைக்கூறுகள்(essential oil) வெளியே வரும். இந்த தாளிப்பின் வாசனை உனவுக்கே ஒரு தனி டேஸ்ட் குடுக்கும்.
- மற்ற பொருட்கள் வதங்க தேவையான வெப்பம் சேர்க்கும் அதாவது கடுகுவெடிக்கும்போது தான் எண்ணெய் போதுமான வெப்பத்தை அடைந்திருக்கும் என்று அர்த்தம்.அதற்கு அப்புறம்தான் பிற தாளிப்பு பொருட்கள்(உருட்டப்பட்ட உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய், கருவேப்பிலை) சேர்க்கலாம்.
- ஜீரண சக்தியை தூண்டும் மற்றும் வெப்பத்தில் சுடப்பட்ட கடுகு, அதன் மருத்துவ பயன்கள் ரிலீஸ் செய்யும். இதன் வாசனைக்கூறுகள் வாய்வாயுப்பிரச்சனையை குறைக்கும் சக்தி வாய்ந்தவை.
மருத்துவ நன்மைகள்
- ஜீரண சிக்கல்கள் தீர்க்கும்
கடுகை பயன்படுத்தி தாளித்த உணவு, ஜீரணத்துக்கு உதவுகிறது. வாயு புடைக்கும் பிரச்சனைகள் குறையும்.
- வலி மற்றும் வீக்கம் குறைக்கும்
கடுகுஎண்ணெய் மூட்டு வலி, தசை வலி ஆகியவற்றுக்கு பாட்டிகள் வைத்தியம் சொல்லும் மருந்து.
- தூக்கமின்மை- நரம்பு நலத்திற்காக
மிகவும் மனஅழுத்தமாக இருந்தால் கடுகுஎண்ணெய் சிறு சூட்டில் தேய்த்து தூங்கினால் தூக்கம் நன்றாக வரும்.
- சளி, இருமல் குணமாக
கடுகு, சுக்கு, திப்பிலி, வெங்காயம் சேர்த்து கசாயம் போல் குடிக்கலாம்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இதில் உள்ள ஆண்டி-ஆக்சிடன்ட் மற்றும் வைட்டமின்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
- புற்றுநோய் தடுக்கிறது
குளுக்கோசினோட்டுகள் மற்றும் மைரோசினேஸ் போன்ற சேர்மங்கள், புற்றுநோய் செல்களின் வளைர்ச்சியை தடுக்கும்.
- குழைந்தைகளுக்கான வயிற்று வலி
கடுகை நன்றாக அரைத்து, சிறிது சுக்குடன் சேர்த்து தொப்புள் பகுதியிலே மெதுவாக பூசினால் வயிற்று வலி குறையும்.
- குடல் புழுக்கள்
சிறிது கடுகை ஊறவைத்து அந்தநீரை வெறும் வயிற்றில் குடிப்பதனால் குடல் புழுக்கள் அழியும்.
- மலச்சிக்கல் தீர
வெறும் வயிற்றில் கடுகு தண்ணீர் குடித்தால், செரிமானம் நன்கு நடைபெறும்.
எவ்வளவு பயன்படுத்தலாம் ?
- கடுகுஎண்ணெய் அதிகம் பயன்படுத்தினால் வயிற்றுக்கு எரிச்சல் ஏற்படலாம்.
- ஆஸ்துமா அல்லது அலர்ஜி உள்ளவர்களுக்கு கடுகு வாசனை அதிகம் வந்தால் சுவாச சிரமம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
Shop now: வாசனை என்று சொன்னால் நம் TASTESY இடுக்கி ஏலக்காய் தான் – இப்போது வாங்குங்கள்!
முடிவுரை
கடுகு என்பது ஒரு மசாலா பொருள் மட்டுமல்ல. அது ஒரு மருந்தாகவும், நம்ம பாட்டிகள் நம்பிய களஞ்சியமாகவும் இருந்துள்ளது. இது சிறியதுதான், ஆனால் அதில் மறைந்திருக்கும் நன்மைகள் பெரிது.
நம்ம வீட்டு சமையலறையில் இருக்கும் இந்தச் “சின்ன வித்துக்கு” பெரு மரியாதை கொடுப்போம்..
0 Comments