மருத்துவ குணமிக்க மாசாலாக்கள் நம் சமையலறையில் உள்ளன..அவற்றில் முக்கியமானவை மிளகு, சோம்பு, சீரகம். இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் உடலை பாதுகாக்கும் ஒரு இயற்கையான பாதுகப்பு சுவராக செயல்படும்..
இந்த மசாலாக்கள் ஏன் முக்கியம்? அவை நமக்கு என்ன நன்மை செய்கின்றன? என்பதைப்பற்றி இக்கடுரையில் தெளிவாக பார்க்கலாம்..
1.மிளகு- இம்யூனிட்டியின் இராஜா
”மிளகு இல்லாம ரசமா?” ”சிக்கனுக்கு மிளகு இல்லாம சுவையா?” இதெல்லாம் கேள்வி தான் ஆனா உண்மையிலே மிளகு ஒரு பாரம்பரிய ஹெர்பல் டோனிக் மாதிரி செயல்படும்.

முக்கிய ஊட்டசத்திக்கள்:
- பைபரின்
- வைட்டமின் K, B6
- கால்சியம், இரும்புசத்து
- Dietary fiber
முக்கியமான மருத்துவ பயன்கள்
- இம்யூன் சக்தியை மேம்படுத்தும்– பைபரின் உடலின் இரத்த வெள்ளையணுக்களின் செயல்பாட்டை தூண்டும்.
- சளி, இருமல், காய்ச்சல் குறைக்கும்– சளியை நாசிகையில் வெளிவர உதவும் expectorant ஆக வேலை செய்கிறது.
- சர்க்கரைநோயை கட்டுபடுத்துகிறது– மிளகு இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுபடுத்துகிறது.
- உடல் எடையை குறைக்கும்– உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கவும், மெடபாலிஸ்மை தூண்டவும் உதவுகிறது.
ஏன் தினசரி சேர்க்க வேண்டும் ?
மிளகிள் உள்ள “பைபரின்” என்னும் செயற்கூறு, நம் உடலில் உள்ள மற்ற ஊட்டசத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. இது வலி நிவாரணியாகவும், சளி இழிதாக்கியாகவும் செயல்படுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பாதுகாப்பான மருந்து போல் உள்ளது.
சமையலில் சேர்க்கும் விதங்கள்
- ஒரு டீஸ்பூன் மிளகு , சிறிது ஜீரகம், பூண்டு சேர்த்து இடித்து மிளகு ரசம் தாயாரிக்கலாம்.
- பொடி செய்து சாதத்தில் நெய்யுடன் கலக்கி சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
- பூண்டு சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதத்தில் சிறிதளவு மிளகுத்தூள் கலந்து சாப்பிட்டால் சுவையும், செரிமானமும் இரண்டும் கிடைக்கும்.
எங்களின் இடுக்கி மிளகை வாங்க – இங்கே கிளிக் செய்யவும்..!!!
2.சீரகம்– செரிமானத்தின் ரகசிய கூட்டாளி
சமையலில் கடுகுக்கு அடுத்தபடி விழும் “கீர்ர்” சத்தம் தான் சீரகம்.

முக்கிய சத்துக்கள்
- Cumin aldehyde
- ரைபோபிளேவின், நியாசின்
- துத்தநாகம், மாங்கனீஸ்
முக்கியமான மருத்துவ பயன்கள்
- செரிமான சக்தியை அதிகரிக்கிறது- சீரகத்தில் உள்ள குமின் அல்டிஹெட் (cumin aldehyde) என்னும் எண்ணெய், வயிற்று சிராய்வுகளை தூண்டும். இது பசியை ஏற்படுத்தும், உணவு செரிக்க செய்கிறது.
- வயிற்றுப்புண்கள் மற்றும் அமிலம் கட்டுபாடு- சீரகம் அண்டசிட்(antacid) போல் செயல்படுகிறது. அமிலத்தன்மை மற்றும் கசப்பை குறைக்கிறது.
- இரத்தம் சுத்திகரிப்பு- சீரகம் சிறுநீரகங்களை தூண்டி உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
- மாதவிடாய் வலி குறைப்பு– பெண்களுக்கு இடையில் ஏற்படும் வயிறு இறுக்கம் மற்றும் வலிக்கு நிவாரணம் தரும் இயற்கை மருந்து.
சமையலில் எப்படி சேர்த்துக்கொள்ளலாம்?
- தினமும் சமையலிள் தாளிப்பில் சேர்த்துக்கொள்ளாலாம்.
- பருப்பு, காய்கறி, சாம்பார், கிச்சடி போன்றவற்றில் வாசனைக்காக சேர்த்துக்கொள்ளலாம்.
- ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ள்ர் தண்ணீரில் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் குடிப்பத்தனால் எடைகுறையும்.
3.சோம்பு– வாசனை மட்டுமல்ல நரம்புகளுக்கும் சாந்தி!
சோம்புனா நமக்கு நியாபகம் வருவது என்ன அப்டினா “சாப்பாட்டுக்கு பிறகு மென்று வாய்க்கு வாசனை தரும்” இல்லையா? அது மட்டும் இல்லாமல் இது ஒரு மருந்தாக பயன்படுகிறது.

முக்கியமான சத்துக்கள்
- அநெதோல்
- வைட்டமின் A , E சத்துக்கூறுகள்.
- எஸ்ட்ரஜன் போன்ற இயற்கை ஹார்மோன் தூண்டிகள்.
முக்கிய மருத்துவ பயன்கள்
- மனஅழுத்தம் குறைக்கும்- சோம்பில் உள்ள Anethol நரம்பியல் அமைப்பை சாந்தபடுத்தும். அதனால் தூக்கம் நன்றாக வரும் மனஅழுத்தம் குறையும்.
- மாதவிடாய் சுழற்சி சீராக்கும்- Anethol ஒரு இயற்கையான ஈஸ்ட்ரோஜன் போன்ற உப்புகளை கொண்டிருப்பதினால் , ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது.
- சிறுநீரக செயல்பாடு மேம்பாடு- சோம்பு ஒரு சிறுநீர் தூண்டியாக செயல்படுகிறது.
- வாயுதொல்லை, வயிற்று உமிழல் குறைக்கும்- சோம்பு வயிற்றில் உள்ள unwanted gas build-up ஐ தடுக்கும். குழந்தைகளுக்கு பாதுகாப்பானது.
- சோம்பு பானம் – கொதித்த நீரில் சோம்பு, மல்லி, இஞ்சி சேர்த்து குடித்தால் குளிர்ச்சியும் தரும், கோடை வெப்பமும் குறையும்.
சமையலில் எப்படி பயன்படுத்தலாம்
- குழம்பு வகைகளில் , கிரேவி போன்றவற்றில் இறுதியில் பொடியாக அரைத்து சேர்த்துக்கொண்டால் ருசி அதிகமாகும்.
- கடலை மிட்டாய், அல்வா, சோமா பொரி, பாயசம் போன்றவற்றில் சோம்பு சேர்க்கப்படும்போது ஒரு டிரடிசினல் ஸ்வீட் போல இருக்கும்.
- உணவுக்கு பிறகு சோம்பு மென்று சாப்பிடலாம்- இது வாயுவை தடுத்து, வாய்க்கு வாசனை தரும்.
மூன்றையும் சேர்த்து ஒரு சூப்பர் பாக்ஸ் !!
சோம்பு+சீரகம்+மிளகு இம்மூன்றையும் ஒரே பொடியாக வறுத்து, தினமும் ஒரு கரண்டி சாதத்துடன் சாப்பிட்டால் மருந்தாகவும் வேலை செய்யும், சுவையாகவும் இருக்கும்,
முடிவுரை
மிளகு,சீரகம்,சோம்பு- இவை மூன்றும் நம் கையடக்கத்தில் இருக்கும் பொக்கிசங்கள் . பெரிய ஹோட்டல்களிலோ, பக்கத்து மருந்துக் கடைகளிலோ தேட வேண்டியதில்லை. தினசரி சமையலில் நுண்ணிய அனுபவத்தோடு சேர்த்தாலே, சுவையும் சுகமும் இரண்டும் நம்மதாயிடும்.
இன்றைய வேகமான வாழ்க்கையில் நாம் அடிக்கடி மறந்துவிடும் உண்மை ஒன்று- “உணவே மருந்து”.
இதனால் தான்,
மிளகு– நோய் எதிர்ப்பு சக்திக்கு,
சீரகம்– செரிமானத்திற்கு
சோம்பு– நரம்பியல் நலனுக்கு
என்று பாரம்பரியத்தில் சொல்லபட்டுவருகிறது.
0 Comments