வீட்டில் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தபடும் மசாலா பொருட்களை உணவில் சேர்த்துக்கொண்டாலே நம் உடல் வெப்பம் கட்டுக்குள் இருக்கும்..
மிளகு, இஞ்சி, பூண்டு, ஏலக்காய், சோம்பு, கொத்தமல்லி, மற்றும் வெந்தயம் போன்ற மசாலாக்களின் உண்மையான தன்மை, உடலின் வெப்பதை எவ்வாறு கட்டுபடுத்துகின்றன மற்றும் அதனை சமாளிக்க கூடிய நடைமுறைகளை பற்றி பார்க்கலாம்..
எதனால் கோடையில் உடல் வெப்பம் அதிகரிக்கிறது ?
கோடையில் சூரியன் உச்சநிலைக்கு செல்வதினால் நம் சுற்றுச்சூழல் மிகவும் வெப்பம் அடைகிறது.இதனால் நம் உடலும் தன்னிலைச் சமநிலையை காப்பாற்ற போராடும், இதற்கிடையில் நாம் எடுத்துகொள்ளும் உணவிலும் சில பொருட்கள்- கடுகு, மிளகு, இஞ்சி, பூண்டு போன்றவை உடல் சூடேற்றும் தன்மை கொண்டவை. இதுபோன்ற சில காரணங்களினால் கோடையில் உடலின் வெப்பம் அதிகரிக்கிறது.

உடல் வெப்பம் அதிகரிப்பதனால் ஏற்படும் விளைவுகள் ?
உடலில் வெப்பநிலை அதிகரிப்பதனால் ,
- மன அமைதி குறையும்
- உடல் உள்வெப்பம் அதிகரிக்கும்
- வெப்பத்தினால் தலையில், உடலில் புண்கள் வரும்
- நரம்பு வலி, மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும்.
- குழைந்தைகளுக்கு சோர்வு, வெடிப்புகள் ஏற்படும்
எனவே கோடையில் உடல் வெப்பத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்..
எதை எப்படி பயன்படுத்துவது ?
1.மிளகு
மிளகுல இருக்குற `பைபரின்` உடலின் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. ஆனால் சரியான அளவில் பயன்படுத்தினால் ஜீரணத்தை மேம்படுத்தி, வெப்பநிலையை சமநிலைபடுத்த உதவும்.

உபயோகிக்க சிறந்த வழி :
- மிளகு ரசம் – ஒரு தேக்கரண்டி மிளகை இடித்து, தக்காளி பூண்டு சேர்த்து சீரகத்துடன் ரசம் வடிக்கலாம்.
- தயிர் சாதத்துடன் மிளகுதூள் சேர்த்துக்கொள்ளலாம்
- ஒரு லிட்டர் தண்ணீரில் 3 மிளகு + ½ டீஸ்பூன் வெந்தயம் போட்டு காய்ச்சி ஆறிய பின் தேன் சேர்த்து சிறந்த டீட்டாக்ஷ் வாட்டராக பயன்படுதலாம்.
2.இஞ்சி
இஞ்சி வியர்வையை தூண்டும் தன்மை கொண்டது அதனால் உடலுக்குள் சூடாக இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் முக்கியமான மூலிகை இது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். எனவே இதனை சரியான முறையில் எடுத்துகொண்டால் இது ஹீட் ரெகுலேடர் போல செயல்பட்டு வெப்பத்தை குறைக்கும்.

உபயோகிக்க சிறந்த வழி :
- கோடையில் அதிக சோர்வோடு இருப்பவர்கள் இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரெஃப்ரஷ் ஆகலாம்.
- தயிர் சாதத்துடன் இஞ்சியை நருக்கி சேர்த்துகொண்டால் சூடு சமமாக இருக்கும்.
- இஞ்சி, வெல்லம், வெந்தயம் சேர்த்து காய்ச்சி பானம் போல குடித்து வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும்.
- மூட்டு வலியும், செரிமான பிரச்சனையும் குணமாக்கும்.
3. பூண்டு
பூண்டின் நன்மைகள் உடலுக்கு மிகுந்தது ஆனால் கோடையில் அளவாகதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.ட் உடலுக்குள் அடங்கியிருக்கும் தொற்றுநோய்களைக் கட்டுபடுத்தும். தக்கவிதத்தில் எடுத்துகொண்டால் இரத்த அழுத்தம், ஜீரணம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் வெப்பம் ஆகியவைக்கு நல்லது.

எப்படி பயன்படுத்தலாம் ?
- பூண்டு வதக்காமல் தயிருடன் சேர்த்து, தயிர் பூண்டு குழம்பு போல செய்யலாம்.
- அதேபோல சிறிது வெந்தயம் சேர்த்து வெந்தயகுழம்பு செய்து சாப்பிட்டால் உடல் சூட்டை கட்டுபடுத்தலாம்.
- பூண்டு உடலுக்கு நன்மையே கொடுத்தாலும் ஒரே நேரத்தில் அதிக பூண்டு எடுத்துக்கொள்ள கூடாது.
4. ஏலக்காய்
”ஏலக்காய் தான் கோடைகாலத்தில் நாட்டு ஏர்கூலர்”
இது உடலுக்கு அவ்வளவு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. வாந்தி, வாய்வழி வெப்பம், அஜீரணம் அகிய எல்லாவற்றிற்கும் எல்லா வயதினருக்கும் ஏற்றது.

எப்படி பயன்படுத்தலாம் ?
- ½ டீஸ்பூன் ஏலக்காய் தூள், ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து இரவு தூங்கும் முன்பு குடித்தால் எளிதில் ஜீரணம் ஆகும்.
- ஏலக்காய் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து பானம் போல தயார் செய்து குடிக்கலாம்.
- இளநீருடன் ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டால் நல்ல செரிமானம் மற்றும் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
5. சோம்பு
”குளிர்ச்சி தரும் ஹீரோ” அப்டினு கூட சொல்லாம் அவ்ளோ நம் உடலை குளிர்விக்கும் சக்தி கொண்டது. கோடையில் மிகுந்த ஈரப்பதத்தை உடலுக்குள் வைத்திருக்க உதவுகிறது. சிறுநீரங்கள் வழியாக கழிவுகளை வெளியேற்றுகிறது. சோம்பு தினமும் நம் உணவில் சேர்த்து கொள்வதினால் வயிற்றுபோக்கு, மார்புச்சூடு போன்ற பிரச்சனைகள் குறையும்.

எப்படி பயன்படுத்தலாம் ?
- 1 டீஸ்பூன் சோம்பு இரவு முழுக்க ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடித்தால் உடலுக்கு நல்லது.
- தயிர் சாதத்தில் சோம்பு வதக்கி சேர்த்து கொண்டால் சுவையும் குளிர்சியும் அதிகம் கிடைக்கும்.
- சோம்பு நெல்லிக்காயை பவுடர் செய்து குழந்தைகளுக்கு கொடுத்துவர நல்ல ஜீரணம் மற்றும் உடல் வெப்பம் தனியும்.
6.வெந்தயம்
வெந்தயம் கசப்பாக இருக்கலாம் ஆனால் அதோட பயன் ரொம்பவே அதிகம். உடலின் உள்வெப்பத்தை தணிக்கிறது. தைராய்டு ஹார்மோன்களையும் சரி செய்கிறது. சரும வறட்சி, மாதவிடாய் கோளாறுகள், பொட்டாசியம் சீரமைப்பு, சர்க்கரை கட்டுபாடு ஆகியவற்றுக்கு வெந்தயம் மிகவும் பயனளிக்கும்.

எப்படி பயன்படுத்தலாம் ?
- ஒரு டம்ளர் தண்ணீரில் 1டீஸ்பூன் வெந்தயத்தை இரவு ஊறவைத்து காலையில் குடித்துவந்தால் உடல் வெப்பம் தனியும்.
- வெந்தயம் மற்றும் இஞ்சி சேர்த்து பானம் தயாரித்து குடித்தால் உடலுக்கு நல்லது.
7.கொத்தமல்லி விதை
கொத்தமல்லி விதையை கோடைகாலத்தில் சற்று அதிகமாகவே எடுத்துக்கொள்ளலாம். சிறுநீர் அடக்கம், உள் வெப்பம், வயிற்று எரிச்சல் போன்ற அனைத்திற்கும் தீர்வாக அமைகிறது. இது உடலுக்கு குளிர்ச்சி மற்றும் சிறுநீரகத்தை சுத்தம் செய்கிறது. மேலும் பொடுகு தொல்லை, மூச்சுதிணரல், வயிற்றபோக்குக்கு சிறந்த பயனளிக்கும்.

எப்படி பயன்படுத்தலாம் ?
- 1ஸ்பூன் கொத்தமல்லி விதையை தண்ணீரில் இரவு ஊறவைத்து காலையில் குடிப்பதினால் உடல் வெப்பம் கட்டுக்குள் இருக்கும்.
- வீட்டில் வைக்கும் குழம்புகளில் சேர்த்துகொள்ளலாம்.
- கொத்தமல்லியுடன் சிறிது சோம்பு சேர்த்து பானம் தயாரித்து குடிக்கலாம்.
முடிவுரை
நம் வீட்டில் பயன்படுத்தும் மசாலா பொருட்கள் நம் உடல் வெப்பதையும் சமநிலையும் கட்டுபடுத்தக்கூடிய சக்தி உள்ளது.
உணவின் தரம், அளவு, அவற்றின் பொருத்தம் என்பதை உணர்ந்தால் நம் சமையலே நமக்கு மருந்தாகும். நம் பாட்டி சொன்ன பழமொழியைக் கூட இங்கு நினைவு கொள்ளலாம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் அதனால் தான் வீட்டு மசாலாவையும், சாப்பாட்டையும் உணர்வோடும், அறிவோடும் சமைக்கவேண்டும் ..
இப்போது உங்கள் வீட்டு மசாலாவையும் மாறுபட்ட பார்வையில் பாருங்கள்.சுவைக்கும், சுகத்திற்கும் இது தான் சத்தான சமம்!!
சுவையும் இயற்கை மனமும் கொண்ட இடுக்கி ப்ரீமியம் பெப்பெர் & ஏலக்காய் வாங்கிட –Click Here
0 Comments